Alaioli
இவ்வாண்டில் தேசிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் காவல் கட்டுப்பாட்டு முகமை (ஏகெபிஎஸ்) க்கு ஆயுதங்கள் வழங்கப்படும்,உள்துறை அமைச்சர் அறிவிப்பு

By S.KUMARA

கிள்ளான், ஏப்ரல் 17- இவ்வாண்டு இறுதிக்குள் தேசிய பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு முகமை சுடும் ஆயுதங்களால் தயார்படுத்தப்படும்.


உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசூதியோன் இஸ்மயில் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.


"இவ்விவகாரம் குறித்து முந்தைய அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்தாலோசிக்கப்பட்டபின் அரசாங்கம் ஒப்புதலை வழங்கியுள்ளது.


"தற்போது லேசர் துப்பாக்கி, இலகு துப்பாக்கி என இரண்டு வகை சுடும் ஆயுதங்கள் பரிசீலனையில் இருக்கின்றன," என்று மேலவை உறுப்பினருமான அவர் மேலும் கூறினார்.


அதுமட்டுமின்றி,எந்த வகையான ஆயுதம் மற்றும் நடைமுறை குறித்தும் உறுதிபடுத்துவதற்கு முன் அரசாங்கம் தீவிரமாக கவனித்து வருவதாக சைபுடின் தெளிவுபடுத்தினார்.- Alaiolinews


கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏகெபிஎஸ் முகமைக்கு ஆயுதங்கள் வழங்கப்படுவது குறித்து  பரிசீலிக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.


நாட்டின் எல்லைக் காவல் மற்றும் பாதுகப்பு அம்சங்களை உறுதிப்படுத்துவதற்காக இந்நடவடிக்கை பரிசீலிக்கப்படுவதாக அவர் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.-Alaiolinews

Leave a Comment
Trending News