Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
தஞ்சோங் சிப்பாட், ஏப்ரல் 17 - இங்கு, தஞ்சோங் சிப்பாட் இடைநிலைப் பள்ளி சீன மாணவியான 17 வயது நிரம்பிய கோக் யு தீ என்பவர், சமூகச் சேவையில் மிகுந்த நாட்டம் கொண்டவரான இவர் , சுன் தியான் கோங் சீன ஆலயத்தில் தனது ஓய்வு நேரத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில், கடந்த வாரத்தில் இவர் ஆலயத்தின் சுற்றுப் புறத்தூய்மைப் பணிகளை மேற்கொண்டிருந்த வேளையில் சுமார் ஆயிரம் கிலோ பாரமுடைய பலகைத் தூண் ஒன்று எதிர் பாராமல் மாணவி மீது சாய்ந்து அவரது உயிரைப் பறித்தது.
இந்த அசம்பாவிதத்தை அறிந்த மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் தஞ்சோங் சிப்பாட்டில் வசித்து வரும் இறந்த மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்து தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன் மரண சகாய நிதியை குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார்.

இதற்கிடையே, இச்சம்பவத்தில் உயிர் நீத்த சீன மாணவியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட தஞ்சோங் சிப்பாட் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் பள்ளி ஆசிரியர்களும் ஒன்று கூடி கண்ணீரில் இறுதி வழி பயணம் அனுப்பி வைத்தனர்.-Alaiolinews


பேராக்
தெலுக் இந்தான் பெக்கான் பாரு கொள்ளைச் சம்பவத்தில் முதியவர் கொலை ; 3 சந்தேக நபர்களை போலீசார் வலைவீச்சு
மலாக்கா
Pasangan ‘riba’ dalam bas ekpres dihukum penjara, denda RM10,000
பேராக்
கேட்டத் தருணத்தில் வீடு தேடி வரும் உதவிகள் – டத்தோ சிவநேசனின் சேவையைப் பாராட்டினார் கம்போங் டெலிமா தலைவர்!!
சிலாங்கூர்
மேற்காசிய போர்முனைப் பிரச்சினையின் எதிரொலியை எதிர் நோக்கும் சிலாங்கூர் மாநில அரசு மக்களுக்கு உதவிடும் மனித நேய அடிப்படையில் ரிம. 131 மில்லியன் ஒதுக்கீடு- பாப்பா ராய்டு தகவல்.
பேராக்
கோயில் என்றால் உயர்ந்து நிற்கும் கோபுரம் இருந்தால் அது கோயில் ; டத்தோ சிவநேசன் உரைத்தார்..!
சிலாங்கூர்
ஆலயத் தூண் சாய்ந்து மரணமுற்ற சீன மாணவிக்கு இடைநிலைப் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கண்ணீர் மழையில் இறுதி அஞ்சலியுடன் வழி அனுப்பினர்
பேராக்
Perak terima 29,310 permohonan pendaftaran Tahun Satu bagi sesi 2027
கெடா
57 anggota PGA digerakkan ke 13 stesen minyak 'hot spot' di sempadan Malaysia-Thailand elak ketirisan bahan api subsidi