Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
செமினி, ஏப்ரல் 17- செமினி சென்ட்ரலில் அமைந்துள்ள பன்முகத் தமிழ்ச் செல்வர் நா.ஆ.செங்குட்டுவன் இலக்கியச் சோலையில், சிலாங்கூர் மாநில அளவில் இருக்கும் 3 தமிழ்ப் பெண்மணிகள், நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 19.4.2026 மாலை 5.30 மணியளவில் நடைபெற விருக்கும் இலக்கிய விழாவில் தமிழ் மாமணி விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்படவிருக்கின்றனர்.

இனிய நந்தவனம் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் முன்னெடுப்பில், செமினி இலக்கிய விழா ஏற்பாட்டுக் குழுவினர் வழி நடத்தவிருக்கும் நிகழ்ச்சியில் ஆர் ஆர் ஐ தமிழ்ப் பள்ளித் தலைமையாசிரியர் திருமதி புஷ்பராணி கிருஷ்ணன், கோல சிலாங்கூர் நகராண்மைக்கழகத்தின் உறுப்பினர் திருமதி புஷ்பா நாகையா வெங்கடேசன், கோல சிலாங்கூர் கெ அடிலான் மகளிர் அணியின் வட்டாரத் தலைவி திருமதி ஜெகதீஸ்வரி வேலு ஆகிய மூவரும் விருதுகளைப் பெறவிருக்கின்றனர்.

செமினி சிற்றூரில், 3- 1, ஜாலான் செமினி சென்ட்ரல் 6, சென்ட்ரல், செமினி என்ற முகவரியில் அமைந்துள்ள விழா மண்டபத்தில் நடைபெற விருக்கும் நிகழ்ச்சியில் இலக்கிய ஆர்வலர்கள் விருது பெறுவோர் குறித்த நேரத்தில் வந்து கலந்து கொள்ளும்படி இந்த நிகழ்ச்சியின் விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.- Alaiolinews

பேராக்
தெலுக் இந்தான் பெக்கான் பாரு கொள்ளைச் சம்பவத்தில் முதியவர் கொலை ; 3 சந்தேக நபர்களை போலீசார் வலைவீச்சு
மலாக்கா
Pasangan ‘riba’ dalam bas ekpres dihukum penjara, denda RM10,000
பேராக்
கேட்டத் தருணத்தில் வீடு தேடி வரும் உதவிகள் – டத்தோ சிவநேசனின் சேவையைப் பாராட்டினார் கம்போங் டெலிமா தலைவர்!!
சிலாங்கூர்
மேற்காசிய போர்முனைப் பிரச்சினையின் எதிரொலியை எதிர் நோக்கும் சிலாங்கூர் மாநில அரசு மக்களுக்கு உதவிடும் மனித நேய அடிப்படையில் ரிம. 131 மில்லியன் ஒதுக்கீடு- பாப்பா ராய்டு தகவல்.
பேராக்
கோயில் என்றால் உயர்ந்து நிற்கும் கோபுரம் இருந்தால் அது கோயில் ; டத்தோ சிவநேசன் உரைத்தார்..!
சிலாங்கூர்
ஆலயத் தூண் சாய்ந்து மரணமுற்ற சீன மாணவிக்கு இடைநிலைப் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கண்ணீர் மழையில் இறுதி அஞ்சலியுடன் வழி அனுப்பினர்
பேராக்
Perak terima 29,310 permohonan pendaftaran Tahun Satu bagi sesi 2027
கெடா
57 anggota PGA digerakkan ke 13 stesen minyak 'hot spot' di sempadan Malaysia-Thailand elak ketirisan bahan api subsidi