Alaioli
ஆர்.ரமணி
இராமநாதபுரம், ஏப்ரல் 14: தமிழக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக உத்திரகோசமங்கை திருக்கோவில் தரிசனம் செய்த தருணத்தில், மனதை நெகிழ்விக்கும் வகையில் சிறப்பான பரதநாட்டிய விழா கண் நேர்ந்ததாக அலை ஒளி ஊடகத்தின் இயக்குநர் ஆர்.ரமணி தெரிவித்தார்

தமிழகத்தின் பல பகுதிகளான சென்னை, மதுரை, சிவகாசி உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த மாணவர்கள் இணைந்து இந்த விழாவில் கலந்துகொண்டனர். 4 வயது முதல் 18 வயது வரை உள்ள இளம் கலைஞர்கள் தங்கள் திறமைகளை அசாத்தியமாக வெளிப்படுத்தி, பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
குறிப்பாக மதுரையைச் சேர்ந்த கவினி மற்றும் திவாஷினி மாணவிகள், சொக்கநாதர்–மீனாட்சி சுந்தரேஸ்வரர் வடிவில் ஆடிய நிகழ்ச்சி பார்வையாளர்களின் பாராட்டை பெற்றது.

சிவகாசியிலிருந்து 20 மாணவர்களுடன் கலந்து கொண்டதாகவும், இவ்விழாவில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளதாகவும், பரதநாட்டிய பயிற்சியாளர் திருமதி ஐஸ்வரியா தெரிவித்தார். மேலும், இந்நிகழ்ச்சி அவர்களின் ஆசிரியை திருமதி ஈஸ்வரி தலைமையில் நடைபெற்றதாகவும் கூறினார்.
இவ்விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பரதநாட்டிய விழா, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைக்கும் இளம் தலைமுறையின் அர்ப்பணிப்பிற்கும் சிறந்த சான்றாக அமைந்தது.-Alaiolinews



சிலாங்கூர்
ஜெராம் பத்து பாத்தா கிராமத்தில் ஈக்கள் படையெடுப்பு தொடர்கிறது!- மாநில அரசின் நடவடிக்கை தேவை.
சிலாங்கூர்
பள்ளி மாணவர்கள் கழிப்பறை சுற்றுப் புறங்களைச் சுத்தம் செய்வது கேவலமில்லை!- சமூக ஆர்வலர் பரம்சிவா விளக்கம்.
ஆலயம்
தெலுக் இந்தான் சித்திரா பௌர்ணமி நெறியுடனும் பண்பாட்டுடனும் நடைபெற காவல் துறை தீவிரம் : டத்தோ சிவநேசனுடன் கையோடு கைகோர்ப்பு..!
சிலாங்கூர்
தாமான் அமான் குடியிருப்பில் கால்வாய்கள் உடைந்து பாதிப்பு, மக்கள் அவதி- சாம்சன் நடவடிக்கை
பினாங்கு
Tech Dome Penang Sparks Scientific Curiosity Among Students
சிலாங்கூர்
Mayat bunuh dibungkus dalam kanvas di Pulau Angsa
பினாங்கு
Persiapan Sukan SEA 2027 di Pulau Pinang cecah 85 peratus
கிளாந்தான்
Wanita dicekup polis, simpan raifal jenis M16 dalam rumah